வியாழன், 25 செப்டம்பர், 2014

ஊக்குவித்தல்’ (Motivation)


‘ஊக்குவித்தல்’(Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or motum எனும் சொல்லில் இருந்து உருவானது. இச்சொல்லிற்குச் ‘செயல்படு’ அல்லது‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள். எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே ‘ஊக்குவித்தல்’எனப்படுகிறது.
.
‘மாஸ்லோ’ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’, ‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்; மேலும் உலகில்உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும் குறிப்பிடுகிறார். ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு மாணவன் தனது வாழ்க்கையில்
உயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது. 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மன நல மசோதா

தற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மன நல மசோதா இந்த வாரத்தில் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மூலம் மன நல கவனிப்பை அனைவருக் கும் தரும் உரிமையை அளிக் கும்.முதன் முறையாக நாட் டில் கிரிமினல் சட்டம் சீர மைப்பு தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகி யுள்ள மனநல கவனிப்பு மசோதா 2013 தற்கொலை யை சட்டவிரோதம் என கூறும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்கொலை க்கான முயற்சிப்போரின் மனநலம் கருத்தில் கொள் ளப்படும்.இந்த மசோதா நிலைப் படி தற்கொலை என்பது கிரிமினல் செயல்பாடு அல்ல. தற்கொலை முயற்சி யை மேற்கொள்பவர்களு க்கு மன நல சிகிச்சை அளிக் கப்படும். தற்கொலை சட்ட விரோதமானது என கூறும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 309 ல் தற்போதைய மசோதா விலக்குஅளிக்கும்.தற்போதைய மசோதா படி தற்கொலை

முயற்சியும் மனநல ஆரோக்கியமும் ஒன்றிணைத்து பார்க்கும் நிலை யை அளிக்கும்.இந்த மசோதாவை சுகா தாரத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது.

தற்கொலை முயற்சி மேற்கொள் பவர்களின் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இந்த மசோதாவில் வழி வகுக் கப்பட்டுள்ளது.முதன் முறையாக அரசு மன நல சட்டத்தில் உரிமை சார்ந்த அணுகு முறையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2008ம்ஆண்டு மே மாதம் 3ம் தேயின்று குறைபாடு நபர்கள் உரிமை யை மனநல சட்டத்தில் ஒன்றிணைக்க ஐ.நா. கூடுகை யில் இந்தியா கையெழுத் திட்டது அதனைத்தொடர் ந்து தற்போது இந்த மசோ தா கொண்டுவரப்பட்டுள் ளது.

புதிய மசோதாப்படி , மனநல நேயாளிகளுக்கு மின்சார சிகிச்சைஅளிப் பது, சங்கிலியால் பிணைத் தல் மற்றும் தலையை மொ ட்டை அடித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நட வடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும் அங்கீகாரமற்ற மன நல மையம் நடத்துபவர் களுக்கு ரூ 50ஆயிரம் அபரா தம் விதிக்கப்படுகிறது.


The new mental health care bill, which seeks to decriminalise suicide and make access to affordable mental health care a right for all, was introduced in Rajya Sabha this week.
For the first time in the history of criminal law reform in the country, Mental Health Care Bill, 2013 seeks to decriminalise acts of suicide by linking them to the state of mental health of the person attempting the act.
The Bill explicitly states that acts of suicide will not be criminalised and those attempting suicide would be treated as mentally ill unless proved otherwise and therefore exempted from the current provisions of Section 309 of Indian Penal Code.
Section 124 of the Bill states, “Notwithstanding anything contained in Section 309 of the IPC, any person who attempts suicide shall be presumed, unless proved otherwise, to be suffering from mental illness at the time of the bid and shall not be liable to punishment under the said section.”
The Bill thus clarifies that the act of suicide and the mental health of the person committing the act are inseparably linked and have to be seen together and not in isolation.
Moved by the Ministry of Health, the Bill lays down a proper provision for the treatment of persons attempting suicide.
It seeks to provide for mental health care for persons with mental illnesses and to protect, promote and fulfil the rights of such persons during the delivery of mental health care and services.
It is the first time that the Government has come up with a rights based approach in the mental health law.
The Law Commission will separately move this amendment to the Criminal Law which would eventually be effected by the Home Ministry.
However, Health Ministry sources said the Law Ministry agreed on the proposed section in the new Mental Health Care Bill to decriminalise suicide.
“It is a landmark Bill which takes care of the rights of the mentally ill. It is forward looking and India needed such a law. It strongly protects the rights of mentally ill and puts a lot of onus for the welfare of the ill on the Government,” a Health Ministry official said.
The Bill fills the long standing gap in the mental health law in India after the country ratified the UN Convention on the Rights of Persons with Disabilities requiring it to harmonise its laws with those prevalent worldwide. India had signed the convention on October 1, 2007 and it came into force on May 3, 2008.
Once the Parliament passes the Bill and it is assented by the President, it will replace the Mental Health Act of 1987.
The new Bill guarantees several rights to the mentally ill - from the right to privacy in mental health establishments to the right to dignity. It bars inhuman practices such as electro convulsive therapy without anaesthesia, sterilisation as a treatment for illness, chaining and tonsuring of heads of the mentally ill.
The Bill also provides stringent penalties for those found running unregistered mental health care establishments which would be fined with Rs. 50,000 to Rs. five lakh depending on the frequency of the offence.
It seeks to regulate the public and private mental health sectors and establish a mental health system integrated into all levels of general health care.
The law also provides for the Advance Directive to be furnished in writing by a person, irrespective of his mental illness, and registered with a Mental Board to be set up by the government at state and central levels. This directive allows the individual to appoint a nominated representative to deal with the kind of treatment he wants in the case he falls mentally ill in future.
The Bill provides for a State Mental Health Authority and a Central Mental Health Authority along with a Mental Health Review Commission to regulate the sector and register institutions.

செவ்வாய், 23 ஜூலை, 2013

மன அழுத்தம் உண்டாக்கும் மனச்சோர்வு

மனச்சோர்வில் இந்தியரகளுக்குதான் முதலிடம்!! உலக சுகாதாரக்கழகத்தின் சாரபில் நடைபெற்ற ஆய்வில் மனதளவில் பெரிய அளவில் சோரவாக இருப்பவரகளில் இந்தியரகள்தான் அதிகமானவரகள் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி சீனரகள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறாரகள். தங்கள் வாழ்நாளில் மனச்சோரவு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்திருக்கிறாரகள். மிகவும் கடுமையான மனச்சோரவு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்துள்ளனர. இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோரவு உடையதாக இருக்கிறது.

பி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம் பிரான்ஸ் ஜெரமனி இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் நெதரலாந்து ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை  அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் கொலம்பியா இந்தியா சீனா லெபனான் மெக்சிகோ தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளரச்சி குறித்து உலக வங்கி நிரணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மனச்சோரவு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறாரகள் ஆய்வாளரகள். உலகம் முழுவதும் சுமார 12 கோடிப்பேர மனச்சோரவால் பாதிக்கப்பட்டுள்ளனர. குறிப்பாக 15 வயது முதல் 44 வயது வரை உள்ளவரகளுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடுமையான மனச்சோரவு பற்றிய ஆய்வு புருவத்தை உயரத்தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடுகள் அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுகளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில் எதிரபாரத்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.

அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பயங்கரவாதத் தாக்குதல் தொடரபான அச்சம் ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர. அமெரிக்க வேலையின்மை அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநரகள் சுட்டிக்காட்டுகிறாரகள். அதற்கு மாறாக பொருளாதார நெருக்கடியை எதிரகொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோரவு குறைவு என்பது அந்த வல்லுநரக ளின் கருத்தாகும்.

கடுமையான மனச்சோரவு இந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை துக்கம் தவறு செய்துவிட்டதாகக் கருதுதல் தாழ்வு மனப் பான்மை தூக்கமின்மை பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் அமெரிக்கா ஜெரமனி சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோரவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாரகள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

மனச்சோர்வு அல்லது உளச்சோரவு நோய்

மனக்கவலை அதிகாலை தூக்கமின்மை
மிகுந்த சோர்வு பசியின்மை
எடை குறைவு அடிக்கடி அழுதல்
தன்னம்பிக்கையின்மை
எதிலும் ஆரவமின்மை
அதிகமான குற்ற உணர்வு

புதன், 27 மார்ச், 2013

பேய் - உளவியல் பார்வை


பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார், 

"டே மச்சான், "பேய் இருக்குன்னு நம்புறியா?"

"என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா" 

"எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்"

"என்னடா சொல்றா? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?"

"இல்லை உண்மையாத்தான் சொல்கிறேன் மச்சி. பலவாட்டி, பல உருவங்களில் பேயைப் பார்த்திருக்கிறேன்"

"என்னடா சொல்ற? நம்புற மாதிரியா இருக்கு? நிஜமாவா?"

"உண்மையா தான்டா. அதுமட்டுமில்லை, சில தடவை அது எங்கிட்ட பேசுது. அதை நான் தெளிவாகக் கேட்டிருக்கிறேன்டா"

"என்னடா நீ! இப்பிடிச் சொல்ற? எனக்கு இப்பவே ஒரு மாதிரி இருக்கு...."

"என் காதுல அது பேசுறது கேக்கும் மச்சி. அப்பப்போ அந்த நேரத்துல மல்லிகைப் பூ வாசனையும் சேர்ந்து வருது. அப்படின்னா ஆவிகள், பேய்கள் இருக்குன்னு தானே அர்த்தம்"

"லூசு மாதிரி உளராதே! நீ சீரியஸாக சொல்றியோ என்று நானும் பயந்துட்டேன்"

"இல்லடா நான் சீரியஸாகத்தான் சொல்றேன். என்னைப் பார்த்தால் பொய் சொல்றவன் மாதிரியா உனக்குத் தெரியுது?"

”அதைத்தானே நானும் யோசிச்சு குழம்பு போயிட்டேன். வேறு யாராவது இப்படிப் பேசினால், போடா வென்று.. சொல்லிட்டு போயிருப்பேனே. நீ பேச்சுக்குக் கூடப் பொய் சொல்பவனில்லையே!"

உங்களுக்கும், நண்பருக்குமிடையே நடந்த இந்த உரையடல்களில் இருந்து நீங்கள் புரிந்து கொள்வது என்ன?பேய், ஆவி போன்றவை இருக்கிறது என்று நம்புபவர்கள் இந்த உரையாடலை நிச்சயம் நம்புவார்கள். பேயை நம்பாத சிலர் உங்கள் நண்பருக்குப் பைத்தியம் என்னும் அதிகபட்ச முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்கள் நண்பர் பொய் சொல்கிறார் என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் சம்பவத்தில் உங்கள் நிலை என்ன? என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறீர்கள்? அந்த உரையாடலைச் சரியாகக் கவனித்துப் பாருங்கள். அதில் பேய் பற்றிச் சொன்ன உங்கள் நண்பர் ஒரு நம்பிக்கையானவர் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பொய் சொல்வாரா? அப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு ஏன் வரப்போகிறது?

அப்படியென்றால் என்னதான் நடந்தது? உங்கள் நண்பர் பொய் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு உருவங்கள் தெரிந்ததும், காதில் குரல் கேட்டதும், மல்லிகைப்பூ வாசனை வந்தது அனைத்துமே உண்மைதான். அப்படியென்றால் பேய்கள், ஆவிகள் உள்ளன என்பதுதான் முடிவா? இல்லை! அதுவும் இல்லை. பேய் என்பது இல்லவே இல்லை! ரொம்பத் தெளிவாகக் குழப்புகிறேன் அல்லவா? இதை விளக்கமாகப் பார்ப்போமா......! 

உங்களுக்கு முன்னால் ஒரு ரோஜாப்பூவும், ஒரு மல்லிகைப்பூவும் வைக்கப்படுகிறது. அதில் நீங்கள் ரோஜாப்பூவை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறீர்கள். ஆனால் மல்லிகைப்பூவை ஏற்கனவே பலமுறை பார்த்து இருக்கிறீர்கள். அதை மல்லிகைப்பூவென்று தெரிந்தும் வைத்திருக்கிறீர்கள். மல்லிகைப்பூவைப் பார்த்ததும் அதை, 'மல்லிகைப்பூ' என்று உடனே சொல்லி விடுகிறீர்கள். ஆனால் ரோஜாப்பூவை, ரோஜாவென்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். காரணம் ரோஜாப்பூவைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதுவரை உங்களிடம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு பூவென்று தெரிகிறது. காரணம், வேறு பூக்களைப் பார்த்த அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே இருப்பதால், இதை ஒரு பூவென்று அனுமானிக்கிறீர்கள். ரோஜாப்பூவென்றுதான் சொல்லத் தெரியவில்லை. 

முன்பு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஒரு பூவைக் காட்டி, இதுதான் மல்லிகைப்பூ என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மல்லிகையின் வடிவம், நிறம், மணம், அழகு, மென்மை என்ற அனைத்தும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருக்கிறது. அதனால்தான் அந்தப் பூவைப் பார்த்ததும், உங்கள் மூளை தன்னிடம் ஏற்கனவே பதிந்திருக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டு, மல்லிகைப் பூவென்று உங்களுக்கு உணர்த்துகிறது. இந்தச் சாத்தியம் ரோஜாவுக்கு இருக்கவில்லை. மல்லிகையைப் போல, நீங்கள் நேரிலோ, படமாகவோ பார்த்த அனைத்துப் பூக்களையும், உங்கள் மூளை தன்னில் பதித்து வைத்திருக்கிறது.


உங்கள் முன் மல்லிகைப்பூ இருக்கின்றதோ, இல்லையோ! உங்கள் மூளையில் மல்லிகையின் உருவம் முதல் அதன் அனைத்து குணங்களும் பதிந்தபடியே இருக்கின்றன. எப்போதெல்லாம் நீங்கள் மல்லிகைப்பூவைப் பற்றிப் பேசுகிறீர்களோ, அல்லது அது பற்றிக் கேட்கிறீர்களோ, அல்லது அது பற்றிச் சிந்திக்கிறீர்களோ, அல்லது அதன் மணத்தை நுகர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த மல்லிகைப் பூவின் உருவம் உங்கள் நினைவுக்கு வரும். அதாவது மல்லிகைப்பூ வெளியே எங்கும் இல்லை. அது உங்களுடனேயே இருக்கிறது. மல்லிகைப்பூ என்றில்லை. உலகில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் எந்தப் பொருளும் வெளியே இருப்பதாகத்தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படியல்ல. அவையெல்லாம் உங்கள் மூளைக்குள், உங்களுடன்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. மல்லிகை என்னும் செய்தி உங்கள் மூளையில் ஏதோ ஒரு காரணத்திற்காக நிரடப்படும் போது, அதன் வடிவம் மூளையில் இருந்து மீட்டெடுக்கப்படுவது போல, நீங்கள் உலகில் பார்த்த அனைத்துப் பொருள்களும், அவை சார்ந்த அனைத்துச் சம்பவங்களும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருப்பதால், தேவையான சமயங்களில் அவை வெளியே கொண்டுவரப்படும். 

நமது மூளை இது போலப் பதிந்து வைத்திருக்கும் செய்திகள் எவை தெரியுமா? நீங்கள் முகர்ந்த நல்ல வாசனையோ, கெட்ட வாசனையோ, அவை அனைத்தும் மூளையில் பதிவாகி உள்ளது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எத்தனையோ வாசனைகளை உங்கள் மூளை தரம் பிரித்து வித்தியாசம் காணுகிறது. அம்மா என்றோ செய்த சாம்பார் வாசம், மனைவியின் வாசம், ஆபீஸின் அருகே இருக்கும் குச்சு ஒழுங்கையின் மூத்திர வாசம் என அனைத்தும் அதில் அடங்கும். உங்களுக்கு எத்தனை விதமான வாசனைகள் தெரியும் என்று நீங்கள் யோசித்தது உண்டா? அப்படி யோசித்த்தீர்களானால் பிரமித்துப் போகும் அளவுக்கு பலதரப்பட்ட வாசனைகளை நீங்கள் அறிவீர்கள். வாசனை போல நீங்கள் கேட்ட குரல்களில் மைக்கேல் ஜாக்சன் குரல், இளையராஜாவின் குரல், அப்பாவின் குரல், கடன் கொடுத்தவன் குரல் என ஆயிரம் ஆயிரம் குரல்களை நீங்கள் உடன் கண்டு பிடிக்கும் விதத்தில் உங்கள் மூளை பதிந்து வைத்திருக்கிறது. அடுத்தது நீங்கள் பார்த்த முகங்கள். முகங்கள் என்றால் எத்தனை முகங்கள். சிறுவயதில் இருந்து பெரியவனானது வரை கண்ட அனைத்து முக்கிய முகங்களும். கந்தசாமி யார்? கமலக்கண்ணன் யார்? அஜித் யார்? அரவிந்தசாமி யார்? என்பதை உடன் சொல்லும் உங்கள் மூளை. முகங்கள் போலவே பார்த்த படங்கள், பொருட்கள், சினிமாக்கள் என எல்லாம் பதிந்து வைத்திருக்கிறது மூளை. 

நமது மூளையில், 'செரிபெல்லம்' (Cerebellum) என்று சொல்லப்படும் சிறுமூளை, 'செரிப்ரல்' (Cerebral) என்று சொல்லப்படும் பெருமூளை என இருபகுதிகள் உண்டு. இதில் சிறுமூளையானது தற்காலிக உணர்ச்சியால் தூண்டப்படும் அனைத்துச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும். நெருப்புச் சுட்டதும் கையை உதறுவது, நுளம்பு கடித்தால் அடிப்பது போன்ற செயல்களை அது கட்டுப்படுத்துகிறது. ஆனால் நமக்கு நிரந்தரமாகத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பதிந்து வைத்திருப்பது பெருமூளைதான். பெருமுளையின் புறப்பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் (cerebral cortex) என்னும் பகுதியில்தான் இவையெல்லாம் பதியப்படுகின்றன. பெருமூளையான செரிப்ரம், சிறுமூளை செரிபெல்லம் இரண்டையும் மிக மெல்லிய சவ்வு போன்ற பகுதி மூடியுள்ளது. இதுவே செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படுகிறது. சிந்தனை, மொழி, நினைவுகள், உணர்ச்சிகள் என அனைத்தும் இந்த கார்டெக்ஸ் பகுதியில்தான் பதியப்படுகின்றன. பல மடிப்புகளுடன் இது காணப்படும். 


எப்போதும் தொழிற்பாட்டில் இருக்கும் நமது மூளை, தான் பதிந்து வைத்திருக்கும் கோடான கோடிச் செய்திகளை அமைதியான சூழ்நிலைகளில் அவ்வப்போது அது இரை மீட்கும். இரவில் நித்திரையின் போது, அது செய்யும் இந்த இரைமீட்டலைத்தான் கனவு என்கிறோம். சொல்லப் போனால் அந்த இரைமீட்டல் மூளைக்குத் தேவையானதும் கூட. கனவுகள் மூலம் மூளை தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்லலாம். இன்று காலை ஒரு கார் விபத்தை நீங்கள் பார்த்திருந்தால், அன்று இரவு நித்திரையின் போது, உங்களுக்கு எப்போதோ நடந்த ஒரு சைக்கிள் விபத்தை அந்தக் கார் விபத்துடன் இணைத்து கனவாக மீட்டுத் தரும். மூளை பதிந்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான செய்திகளில், அவை சார்ந்த சாயலுடன் ஏதோ ஒன்று நடைபெறும் போது, அந்தச் செய்தியுடன் இணைந்த அனைத்தும் நிரடப்படும். அந்த நிரடலின் போது, அவற்றை ஒழுங்கமைக்க முடியாமல், குழப்பமாக வடிவில் வெளிக்கொண்டு வந்து கனவுக் காட்சிகளாகத் தருகிறது. ஆனால் விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் இரவில் காணும் கனவுக் காட்சிகள் போல, விழிப்பு நிலையில் இருக்கும் போதே அவை நிரடப்படுகின்றன. அந்த நேரங்களில் அவர்கள் விழிப்பு நிலையிலும் தமக்கு முன்னால் நடப்பது போலக் காட்சிகளைக் காண்பார்கள்.


இப்போது மீண்டும் நாம் மேலே உங்கள் நண்பன் சொன்ன பேய்க்கதைக்கு வருவோம்..............!

வெகுசில மனிதர்களுக்கு, அவர்கள் இருக்கும் சூழ்நிலை, குறிபிட்ட காலநிலை, நேரம் ஆகியவை சார்ந்து, மூளை ஒரு அமானுஷ்ய நிலையை அடைகிறது. இருட்டு, தனிமை போன்ற நேரங்களில், நாம் கேள்விப்பட்ட பேய்களின் செய்திகள், எமது முளையில் விழித்திருக்கும் ஒரு திட்டமிடப்படாத நிலையில் நிரடப்படுகிறது. அந்த நிரடலின் காரணமாக மூளை சில உருவங்களைக் காட்சிகளாகக் வெளிக்கொண்டுவருகிறது. அதாவது நாம் பார்த்த உருவங்கள், படித்த கதைகள், பார்த்த படங்கள் ஆகியவை சார்ந்து தானே உருவாக்கிய குழப்பமான ஒரு உருவத்தைக் காட்டுகிறது. சிலருக்கு அவ்வுருவம், அவருக்குத் தெரிந்த இறந்த ஒருவருடையதாகவோ, அல்லது கருமையான உருவமாகவோ தெரிகிறது. இறந்தவர்களின் உருவங்கள் தெரியும் போது, அவர்கள் இறந்த சமயத்தில் தெளிக்கப்பட்ட வாசனை திரவியங்களின் வாசனைகளும், ஊதுபத்தி வாசனைகளும் கூட சேர்ந்து வரலாம். அவர்களின் குரல்களும் கூடக் கேட்கலாம். இவை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ உணரப்படலாம்.

இதை மனோவியல் ஹலூசினேசன் (Hallucination) என்கிறது. ஹலூசினேசன் என்பது பலவகைகளில் மனிதனுக்கு ஏற்படலாம். Visual Hallucination, Auditory Hallucination, Olfactory Hallucination என்பவை அவைகளில் சில. பலருக்கு விஷேசமாக மண்டைக்குள் குரல் கேட்கிறது என்னும் பிரச்சனை அதிகமுண்டு. காதில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக நமக்கு சில இரைச்சல் ஒலிகள் கேட்பது சகஜம். கன்னத்தில் அறைந்தால் கேட்குமே ஒரு விசில் சத்தம், அது போல. வயதாகும் போது இந்தக் குறைபாடு வருவது சகஜமாக இருக்கும். ஆனால் இதுவே கொஞ்சம் அதிகமாகி, இந்த ஒலிகள் நமது மூளைக்குள் பதிந்திருக்கும் சில குரல்களின் ஞாபகத்தை தூண்டிவிடுகின்றன. அது மூளையில் இருந்து வெளிக்கொண்டுவரப்பட்டு, யாரோ காதுக்குள் எதுவோ சொல்வது போலவும், கட்டளையிடுவது போலவும் கேட்கத் தொடங்கும். சிலர் இப்படிக் குரல், தன்னைத் தற்கொலை செய்யச் சொல்லி தினமும் தூண்டியதாகச் சொல்லிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவங்களும் உலகில் உண்டு. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இருட்டில் மரங்களுக்குக் கீழாக போனால், மல்லிகை மணக்கும். அங்கு மல்லிகை மரம் இல்லாவிட்டாலும் கூட.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், ஒரு உருவத்தைப் பார்ப்பவர்களோ, அல்லது குரலைக் கேட்பவர்களோ அப்படிப் பார்த்ததாகப் பொய் சொல்வதில்லை. அவர்கள் உண்மையாகவே உருவத்தைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அத்துடன் அவர்கள் பாரதூரமான வகையில் உள்ள அளவுக்கு மனநோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவையெல்லாம் ஒரு அளவுக்கு மேலே சென்றால் மனவியல் மருத்துவரை அணுகுவதே நல்லது. ஆனாலும் மனநோய் என்பதையும் தாண்டி, ஒருவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor), ஒற்றைத் தலைவலி (Migraine), அல்ஸ்ஹைமர் (Alzheimer) ஆகிய நோய்கள் இருக்கும் போதும் இப்படியான ஹலூசினேசன் வர வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். எனவே இந்தக் காட்சிகளைக் காண்பவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காண்பதும், கேட்பதும், நுகர்வதும் நிஜம். அவர்களுக்குத் தேவை நமது உதவிதான். "பேய்கள் என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளேதான் இருக்கிறது". இது சம்மந்தமான அறிவியல் உண்மையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் போதும். அப்போது பேய்கள் பற்றிய பயம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.

 நன்றி உயிர்மை இதழ்

திங்கள், 17 செப்டம்பர், 2012

நாஜிசத்தின் வருகைக்கான உளவியல்


ஜெர்மன் சினிமாக்களுக்கென்று திரைப்பட வரலாற்றில் தனித்த இடம் உண்டு. அதிலும் இருபதுகளின் துவக்கத்தில் உருவான இம்ப்ரசனிச பாணிப் படங்கள் தனித்த முத்திரை பதித்தவை. தம் உருவத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி. ஜெர்மானியத் திரைப்பட உலகில் நிறையப்படங்களில் எழுத்தா ளராகவும், சில படங்களில் நடிகராகவும், ஜெர்மானிய நாடகத்துறையிலும் அனுபவம் பெற்ற ராபர்ட் வெய்ன் தன்னுடைய முதல் முழு நீளப் படமான டாக்டர் காலிகாரியின் கூடாரம்  1920 என்ற படத்தை 1919 இல் இயக்கினார், 1920 இல் வெளியானது.பிரான்சிஸ் என்கிற இளைஞன் தோட்டம் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். தன்னுடன் அருகில் அமர்ந்திருக்கும் மனிதனிடம் ஜேன் என்கிற பெண்ணைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கி றான். அவளிடம் அவன் ஒரு காலத்தில் காதல்வயப்பட்டிருந்தான்.

 அவன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். ஹால்ஸ்டன்வெல் நகரத்தில் ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. டாக்டர் காலிகாரி அங்கே வருகிறார். நகர அதிகாரியிடம் தன்னிடம் இருக் கும் விசித்திர மனிதன், அதாவது எப்போதும் மயக்க நிலையில் அவரது கட்டுப்பாட்டில் இயங்குபவனான சிசாரே என்கிற தூக்கமனிதன்  பற்றிய காட்சியை நடத்த அனுமதி கேட்கிறார். அந்த அதிகாரி அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பிறகு அனுமதி கிடைக்கிறது. அன்று இரவில் அந்த அதிகாரி மர்மமாகக் கொல்லப் படுகிறார். திருவிழாவின் அடுத்த நாள்.

பிரான் சிஸ் தன் நண்பன் ஆலன் மற்றும் ஜேனுடன் காலிகாரியின் கூடாரத்துக்குள் நுழைகின்றான். அங்கே காலிகாரி, சிசாரேயை எழுப்புகிறார். அவனுக்கு எல்லாம் தெரியும், எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பான் என்கிறார். ஆர்வமுற்ற ஆலன் அவனிடம் நான் எவ்வளவு காலம் உயிரோடிருப்பேன்? என வினவுகிறான். சிசாரே, வெகு குறைந்த காலமே நீ உயிரோடிருப்பாய். இன்றே இறந்து விடுவாய் என்று பதில் கூறுகிறான். ஆலன் துணுக்குறுகிறான். பின்னர் அவர்கள் ஜேனுடன் வெளியேறுகின்றனர். அவள் விடை பெறுகிறாள். இவர்கள் இருவரும் அவள் நம்மில் யாரைக் காதலித்தாலும் நாம் தொடர்ந்து நட்பாக இருப்போம் என்று கூறிப் பிரி கின்றனர். அந்த இரவில் மர்ம உருவம் ஒன்றினால் ஆலன் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்படுகிறான். பிரான்சிஸின் சந்தேகம் டாக்டர் காலிகாரியின் மேல் விழுகிறது. 

ஆலனின் கொலையை யும் நகரத்தில் நடக்கும் தொடர் கொலை கள் பற்றியும் ஆய்வைத் தொடர்கிறான் பிரான்சிஸ். இதற்கிடையில் வேறொரு பெண் ணைக் கொல்ல முயன்றதாகக் கத்தியுடன் ஒருவன் கைதாகிறான். அந்தக் கொலை முயற்சிக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவன், மற்ற கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறான். அவன் ஜெயிலில் அடைக்கப்படுகி றான். அடுத்தநாள் தன் தந்தையைத் தேடிச் செல்லும் ஜேனை காலிகாரி தன் கூடாரத்துக்குள் ஏமாற்றி அழைத்துச் செல்கிறார். அங்கே சிசாரேயால் பயமுறுத் தப்படும் ஜேன் அங்கிருந்து தப்பி ஓடி வருகிறாள். அந்த இரவில் பிரான்சிஸ், காலிகாரியின் கூடாரத்திற்குச் சென்று ஒளிந்திருந்து கவனிக்கிறான். காலிகாரி தன் பெட்டியில் படுத்திருக்கும் சிசாரேயு டன் அமர்ந்திருக்கிறார்.

 அதே நேரம் ஜேனின் அறைக்குள் கத்தியுடன் நுழையும் தூக்க மனிதன் அவளைக் கொல்லாமல் பயமுறுத்தி, மயக்கமுறும் அவளைத் தூக்கியபடி ஓடுகிறான். அக்கம் பக்கத்தினர் விழித்து அவனைத் துரத்துகின்றனர். நகரத்தின் கட்டிடங்களின் வழி ஏறிச் செல்லும் அவன், அவளை வழியில் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான். மேலும் அவனைத் துரத்திச் செல்கின்றனர். அவன் வழியில் விழுந்து இறக்கிறான். ஆனால் பிரான் சிஸ் நம்ப மறுக்கிறான். சிசாரே அங்கே தான் இருந்தான் என்கிறான். அவள் உறு தியாக மறுக்கிறாள். தொடர்ந்து காலிகாரி யின் கூடாரத்துக்குச் சென்று பார்க்கின்ற னர். அங்கே சிசாரே போன்ற பொம்மையே இருக்கிறது. காலிகாரியைப் பிடிக்கின்ற னர். பிரான்சிஸ் பைத்தியக்காரர் விடுதிக் குச் சென்று கேட்கிறான்.

அங்கிருக்கும் மருத்துவர்கள், தலைமை மருத்துவரைப் பார்க்கச் சொல்கின்றனர். அவரைச் சென்று பார்க்கும் பிரான்சிஸ் அதிர்ச்சியுறுகிறான். காலிகாரியே அங்கே தலைமை மருத்துவராக இருக்கிறார். அவர் உறங்கு கையில் மற்ற மருத்துவர்களுடன் சென்று அவரது அறையை ஆராய்கின்றனர். அங் கிருக்கும் நூலில் பதினொன்றாம் நூற் றாண்டில் இருந்த, டாக்டர் காலிகாரி இதே போன்று ஒரு சோம்னாம்புலிச மனித னைத் தன் கொலை நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ள விவரத் தைக் காண்கின்றனர். அதே போன்ற ஒரு சோம்னாம்புலிச மனிதன் இவரிடம் வைத்தியத்திற்குக் கொண்டு வரப் படுகி றான். காலிகாரி தான் படித்த பழம் செய்தி யைப் பரிசோதனை செய்ய விரும்புகிறார். அதே டாக்டர் காலிகாரியாகத் தம்மை வரித்துக் கொள்கிறார். இவ்வாறு கதையை விவரித்துக் கொண்டிருக்கும் பிரான்சிஸ் அமர்ந்தி ருக்கும் தோட்டமே டாக்டர் காலிகாரி யின் பைத்திய வைத்திய நிலையத்தின் பகுதியாகவே இருக்கிறது. பிரான்சிஸ் அங்கே ஒரு நோயாளியாக இருக்கிறான். அங்கே வரும் காலிகாரியின் மீது ஆவே சத்துடன் பாய்கிறான். மருத்துவமனைப் பணியாளர்கள் அவனைப் பிடித்து அடக் கிப் படுக்க வைக்கின்றனர்.

 டாக்டர் காலி காரி சொல்கிறார், அவனது வியாதி எனக்குப் புரிந்து விட்டது. அவன் என்னைப் பழங்காலத்துக் காலிகாரியாக நினைத் துக் கொண்டிருக்கின்றான்.அவனுக்கு என்ன வைத்தியம் பார்ப்பதென்று தனக் குத் தெரியும் என்கிறார்.     ராபர்ட் வெய்ன் இந்தப் படத்தின் மூலம் உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய வகைப்பட்ட திரைப்படங்க ளுக்கான முன்னுரை எழுதினார். புதிய கதைக்கரு, பாத்திரங்கள், விசித்திரமான ஒளி அமைப்புக்கள், கோண வகைப்பட்ட அரங்க வடிவமைப்பு, புதிய வகைப்பட்ட நடிப்பு போன்றவற்றுடன், பயமுறுத்தல் வகைத் திரைப்படங்களுக்கான முன்மாதிரிப் படமாகவும் இது விளங்கியது. அமெரிக்க, ஐரோப்பியத் திரைப்பட உலகின் பல இயக்குநர்களி டம் செல்வாக்குச் செலுத்திய படமாகவும் இது திகழ்ந்தது.

 1930 களிலும் 1940 களி லும் திரைப்பட உலகில் பயமுறுத்திய பிரான்கன்ஸ்டைன், டிராகுலா வகைப் பட்ட படங்களுக்கும் இது முன்மாதிரி யான படமாக இருந்தது. மனிதருக்குள் இருக்கின்ற பய உள வியலின் அடிப்படையாக அமைந்த இந்தப்படம், சிறந்த மர்மப்பட வகையாகப் பலரால் பார்க்கப்பட்டாலும், இதன் அரசியல் தன்மையை, ஜெர்மனியில் 1930களில் அதிகாரத்துக்கு வந்த நாஜிக் களின் வளர்ச்சிக்கான சமூக உளவிய லோடு தொடர்புபடுத்துகிறார், சீக்ஃப்ரெட் க்ரேசர் என்கிற புகழ்பெற்ற ஜெர்மானியத் திரைப்பட விமர்சகர்.

 தனது புகழ்பெற்ற நூலான காலிகாரியிலிருந்து ஹிட்லர் வரை-ஜெர்மானிய சினிமாக்களின் உளவியல் வரலாறு நூலில் இத்த கைய படங்கள் நாஜிக்களுக்குப் பயந்து நடுங்கி அடங்கிப் போகிற உளவியலை மிக நுண்மையான முறையில் சமூக உளவியலில் உற்பத்தி செய்தன என்கிறார். முதலாம் உலகயுத்தத்தின் அழிவுக் குப் பிந்திய கொடூரமான வாழ்க்கை உள வியலிலிருந்து, இரண்டாம் உலக யுத்தக் காலம் வரையிலான காலகட்டத்தின் ஐரோப்பிய உலகின் சர்வாதிகாரத்துக்குப் பயந்து நடுங்கும் உளவியலின் பிம்பமா கவே இத்தகைய படங்கள் இருந்தன. நரம்பு வியாதிக்கு ஆட்பட்ட, மனக்குரூரம் மிக்க பிரான்கன்ஸ்டைன், டிராகுலா போன்ற காட்டேரிவகைப் படங்கள் வெய்னரின், காலிகாரி படத்திலிருந்தே தமது துவக்கப்புள்ளியைக் கண்டடை கின்றன. முதல் உலக யுத்த காலத்திற் குப் பிந்திய ஜெர்மானியத் திரைப்பட உலகில் நிலவிய பொருளாதார மந்தம், படங்களுக்கான தயாரிப்புச் செலவைக் குறைக்கச் செய்தது. அதன் விளைவாகவும், அப்போதுதான் கலை உலகில் முடிவுக்கு வந்து கொண்டிருந்த இம்ப்ரசனிச பாணியை, வெய்னர் தமது படத்துக்கான வெளிப்பாட்டு உத்தியாகத் தேர்ந்தெடுத்தார். செயற்கையான ஓவியம் போன்ற அரங்க வடிவமைப்பு, தெரு, சுவர்கள் எல்லாம், இருள் நிழலின், பல்வேறு பட்ட சாய்கோணங்களின் சேர்மான மாக கதை நிகழும் களத்தை அமைத் திருந்தார் வெய்னர். யதார்த்த உலகு சிதைவுபட்டிருந்ததாகவும் இதனைப் பொருள்கொள்ளலாம். மனித அன்பு, காதல், நட்பு எல்லாம் பயம் நிறைந்த சூழலில் சிதைந்து போன சமூகத்தில் பைத்தியக்காரர்களின் செயலாயிருக்கின்றது.

சோம்னாம்பு லிஸ்டுகள் போல, எஜமானனின் உத்தரவுக்கு அடிபணிந்து, அவர் கை காட்டுகிறவரை, அவருக்குப் பிடிக்காத வரைப் படுகொலை செய்கிற மிகப்பெரிய நாஜிப் படை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஜெர்மனியில் எழுந்தது. ஹிட்லர் என்கிற டாக்டர் காலிகாரி போன்ற, வெறி கொண்ட உளவியலா ளனை அரசியல் தலைமையாகப் பெற்றது. அவரின் பைத்தியக்கார விடுதி போல, ஜெர்மானிய சமூகம் சிதைவுண்ட உளவியலில் சிக்கித் தவித்தது.படத்தின் இறுதியில் பிரான்சிஸ், ஜேன், நான் உன்னைக் காதலிக்கி றேன். எப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம்? என்று தன்னு டன் பைத்தியக்கார விடுதியில் இருக் கின்ற ஜேனிடம் கேட்கிறான். அதற்கு அவள் சொல்லும் பதில், நாம் ராஜரத்தம் உடையவர்கள், நமது இதயத்தின் கட்டளைகளைக் கேட்கக்கூடாது. நாஜிக்களின் இனத்தூய்மை வாதத் தின் குரலும் அதன் அடிப்படையிலான அவர்களின் கொடூரமான செய்கைகளும், இந்த வசனத்தில் எதிரொலிப்பது தற்செயலானதல்ல. காதல் இந்தப் படத்திலும் நொறுக்கப்படுகின்றது. காதலிப்பது பைத்தியக்காரனின் செய்கையாகச் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் ராபர்ட் வெய்னரும் நாஜிக்களின் கொடூரத்திற்குப் பயந்து 1934 இல் ஜெர்மனியை விட்டு வெளி யேறி பிரான்சில் நிரந்தரமாகக் குடியே றினார் என்பது தனிக்கதை.

முனைவர்.சு.ரவிக்குமார்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் எதையும் எதிர்கொள்ளும் உளத்திண்மை ஊட்டப்பட வேண்டாமா?


தைரியலட்சுமி என்ற பெயரைத் தன் மூத்த மகளுக்கு வைக்கும்போது அந்த ஏழை விவசாயி சக்திவேலுவும், அவரது மனைவியும் என்னவெல்லாம் கோட்டை கட்டி இருந்திருப்பார்களோ தெரியாது. பிளஸ் 2 வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்ற செல்ல மகளை மிகுந்த நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி பொறியியலாளராக ஆக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை.யில் சேர்த்திருந்தனர். ஓராண்டு கூட நிறைவடையுமுன் அவளை இப்படி பறிகொடுப்போம், உயிரற்ற அவளுடலைச் சொந்த மண்ணுக்குச் சுமந்து செல்வோம் என்று அந்த அப்பாவி மனிதர் நினைத்திருப்பாரா, பாவம். துணிவாக வாழ்வில் எதையும் எதிர்த்து நின்று போராடி முன்னேறுவாள் என்ற கற்பனையில் மண் விழுந்து, இப்படி ஒரு முடிவெடுக்க எப்படித்தான் துணிந்தாளோ என்று பெற்றோரைப் புலம்ப வைத்துச் சென்றுவிட்டார் மகள்.

ஏப்ரல் 17 அன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற தைரியலட்சுமி முதலாவது வகுப்பு முடிந்தவுடன் விடுதி அறைக்குத் திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாகவே அவருக்குள் அலைமோதிக்கொண்டிருந்த தாழ்வுணர்ச்சி, அச்சம், ‘இனி மீள முடியாது’ என்று இறுகிப் போன மனம் அவரது தன்னம்பிக்கையை அடித்து வீழ்த்திய மோசமான ஒரு கணத்தில் தனது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார். தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டுக் கல்லூரியில் கால் பதித்தவர், ஆங்கில மொழிவழியில் பொறியியல் கற்க இயலாதென தோற்றுப் போன உணர்வின் உந்துதலில் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அதே கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர் மணிவண்ணன் சில நாட்களுக்குமுன் மேற்கொண்ட தவறான வழியையே லட்சுமியும் பின்பற்றிச் சென்றுவிட்டார். மணிவண்ணன் தனது நொறுங்கிய உள்ளத்தின் ஒரு துகளைக் கூட வெளிக்காட்டாதபடி இருந்தவர். அந்த இறுதி நாளின் மாலையில் கூட, விரைவில் தமது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாக உற்சாகமாக நண்பர்களிடம் சொல்லிவிட்டுத்தான் தமது முடிவை நோக்கி காலடி எடுத்து வைத்திருந்தார். துணைவேந்தரிடமும், ஆசிரியர்கள், சக மாணவர்களுடனும் நெருங்கிய தோழமை கொண்டிருந்த மணிவண்ணன் காதல் தோல்வியினால் தான் இப்படியான முடிவைத் தேடிக் கொண்டார் என்றனர். குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் 13 வது இடம் பெற்றிருந்தும்,ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய உயர்கல்வியில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது.முழுவிவரங்கள் தெரியவில்லை. சென்னையில் இந்த ஆண்டில் இதுவரை மாணவர் தற்கொலை எண்ணிக்கை 19 என்கிறது காவல்துறை.

இதில் 11 பேர் கல்லூரி மாணவர்கள். எட்டு பேர் பள்ளி மாணவர்கள். பத்தொன்பது பேரில் 12 பேர் பாடச் சுமையின் கனம் தாளாமல் முறிந்தவர்கள்.ஐ ஐ டி சென்னையில் தொடரும் தற்கொலைகள் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.ஜனவரி மாதம், தேர்வுகளில் தோல்வியைச் சந்தித்த அதிர்ச்சியில் பி.டெக் மூன்றாமாண்டு மாணவி அஸ்வினி வாழ்வை முடித்துக் கொண்டதுதான் ஆண்டின் முதல் தற்கொலை. பிளஸ் 2 மாணவி இந்துஜா, கல்லூரி மாணவி நந்தினி இருவரும் தங்களது படிப்புத் தரம் குறித்துப் பெற்றோர் கடிந்து கொண்டதைத் தாங்கமாட்டாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். பள்ளி மாணவர் மாறன், புவனேஸ்வரி, கலையரசி ஆகியோரும் கூட நன்றாகப் படிக்கவில்லை என்று தாய்- தந்தையர் கோபித்துக் கொண்டதையும், அறிவுறுத்தியதையும் அடுத்து மோசமான முடிவை தேடிக் கொண்டவர்கள். இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாக உயர்ந்துவிட்டது. கவிதா என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வு நேரத்தில் வகுப்புத் தோழி ஒருவருக்கு விடைத்தாளைக் கொடுத்தபோது பிடிபட்டிருக்கிறார். மறுநாள் தந்தையுடன் வருமாறு சொல்லியிருக்கின்றனர். தந்தையோடு சென்றவரைத் தலைமை ஆசிரியை அழைத்துக் கொஞ்சம் கடிந்துகொண்டதோடு அறிவுறுத்தியும் அனுப்பி இருக்கிறார். வீடு திரும்பியவுடன் தந்தை மதிய உணவு வாங்க ஓட்டலுக்குப் போன நேரத்தில் கவிதா தன்னைத் தானே எரித்துக் கொண்டுவிட்டார். மிக அண்மையில் மதுரவாயல் சங்கீதா, அயனாவரம் வினோதினி இருவரும் தேர்வை சரியாக எழுதாத அச்சத்தில் இதே போன்றதொரு தவறான முடிவை எடுத்துப் பெற்றோரைப் பரிதவிக்க விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த அகால மரணங்கள் ஒவ்வொன்றும் மனித நேயமிக்க அன்பு இதயங்களைக் கிழித்துப் போடுபவை. நான்கு மாதங்களுக்குள் இருபத்திரெண்டு தற்கொலைகள் என்பது சராசரியாக வாரத்திற்கு ஒன்று என்றாகிறது.இன்றைய கல்விச் சூழல் பற்றித் தொடர்ந்து கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றனர். எரிமலையின் விளிம்பில் இருக்கிறது நிலைமை என்று கூட எச்சரித்து வருகின்றனர். மதிப்பெண்களைச் சுற்றியே ஓயாமல் மாணவர்கள் விரட்டப்படுகின்றனர் என்பது அடிப்படை உண்மை. படி, படி, படி என்ற சொற்கள் மிகப்பெரும் வன்முறை ஆயுதமாகவே மாறி இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட பிறகு உளவியல் மருத்துவர்களிடம் சென்று உதவி தேடுவது விரிவாகப் பேச வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்.அறிவுப் பெருக்கம், உலக ஞானம், இன்ப வெளிக்குள் உலா, புதுமை தேடல், துருவி ஆராய்தல், குடைந்து நீராடுதல் என்பதாக அமைய வேண்டிய கல்வியின் பயணம் உண்மையில் எப்படி இருக்கிறது? வேதாளம் சேர்ந்து, வெள்ளெருக்குப் பூத்து, பாதாள மூலி படர்ந்த மோசமான இடத்தில் வாழ்க்கைப்பட்ட கதையாக கசப்பிலும், வெறுப்பிலும், அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் கழிகிறது. எதையும் சந்திக்கும் உரம் போட்டு வளர்க்காத குழந்தைப் பருவமாக சமூகம் அடுத்தடுத்த தலைமுறைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. வெற்றியின் கனி மட்டிலுமே ருசிக்க வேண்டும் என்ற போதனை சிறு சறுக்கலுக்குக் கூட தாக்குப் பிடிக்காதவர்களாக மாணவப் பருவத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. ‘எதிர்த்துப் பேசாதே, சொன்னதைச் செய், பேச்சைக் குறை, போய் உட்கார்ந்து படி, உருப்படும் வழியைப் பார்’ என்ற ஒற்றை வழி உரையாடலே வீடுகளில் மிகுந்திருக்கிறது.

குரல்களை ஒலிக்காமல் செய்துவிடுவது உள்ளுணர்வுகளின் இழைகளை எப்படி கிழித்துச் சின்னாபின்னமாக்கும் என்பதை உணர்வதில்லை நாம். எல்லாம் மோசம் போன பின் கதறிக் கதறித் துடிக்கும் சமூகம் தன்னம்பிக்கையும், துணிவும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் உளத் திண்மையும் குழந்தைப் பருவத்திலேயே புகட்டப் பட வேண்டியது இன்றியமையாதது என்பதை ஏன் விவாதிப்பதில்லை ? குழந்தைகள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும், பலவீனங்களைக் களைந்து கொள்ள வேண்டும், யாராவது ஏதாவது சொன்னால் சகிப்புத் தன்மையோடு அதைக் கேட்டுக் கொள்ளவேண்டும், கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும், தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் பழக வேண்டும் என்பதெல்லாம் சொல்லி வளர்க்காத தன்மை தானே,திறமை வாய்ந்த மாணவர்களைக் கூட பலி வாங்கிக் கொண்டிருக்கிறது ? தமிழ்வழியில் படித்ததை ஏன் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் நேரத்தில் தலைக் குனிவாகக் கருத வேண்டும்? தாங்கள் தான் தவறு செய்துவிட்டோமோ என்று பெற்றோரும் சில வேலைகளில் தடுமாறும் இடமாக அது மாறிவிடுகிறது. மொழி பரிமாற்றத்தில் ஆங்கிலத்தின் இடம் சுயமதிப்பை இழக்கும் அளவுக்குச் சென்றது வேதனையானது. தாய்மொழிவழிக் கல்வியை உயர்கல்வியிலும் பெருமையோடு வழங்கி, வேலை வாய்ப்பையும் எதிர்காலத்தையும் உத்தரவாதப்படுத்தாத ஆட்சியாளர்களின் கொள்கை தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் அல்லவா பிள்ளைகள் படும் பாடு? ஒட்டு மொத்த மாற்றங்களை உட்கொண்டு ஆரோக்கியமான கல்விச் சூழலைச் சமைத்திட வேண்டிய காலத்தின் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருக்கிறது. பத்திரிகைகளைப் புரட்டும் போதெல்லாம் தட்டுப்படும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் புகைப்படங்கள் மீது தெறிக்கும் பெருமூச்சு அதைத் தான் சொல்லிக் கொண்டே இருக்கிறது.-எஸ்.வி.வேணுகோபாலன்

திங்கள், 26 டிசம்பர், 2011

குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும். மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்

பதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது.

இதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்.

இதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோடு அழிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம். ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை.

குழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது. பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை , அழுத்தத்தைக் குறைத்தல், சுய திறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.

மன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனிமனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும். இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக் கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.