செவ்வாய், 23 ஜூலை, 2013

மன அழுத்தம் உண்டாக்கும் மனச்சோர்வு

மனச்சோர்வில் இந்தியரகளுக்குதான் முதலிடம்!! உலக சுகாதாரக்கழகத்தின் சாரபில் நடைபெற்ற ஆய்வில் மனதளவில் பெரிய அளவில் சோரவாக இருப்பவரகளில் இந்தியரகள்தான் அதிகமானவரகள் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி சீனரகள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறாரகள். தங்கள் வாழ்நாளில் மனச்சோரவு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்திருக்கிறாரகள். மிகவும் கடுமையான மனச்சோரவு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்துள்ளனர. இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோரவு உடையதாக இருக்கிறது.

பி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம் பிரான்ஸ் ஜெரமனி இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் நெதரலாந்து ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை  அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் கொலம்பியா இந்தியா சீனா லெபனான் மெக்சிகோ தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளரச்சி குறித்து உலக வங்கி நிரணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மனச்சோரவு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறாரகள் ஆய்வாளரகள். உலகம் முழுவதும் சுமார 12 கோடிப்பேர மனச்சோரவால் பாதிக்கப்பட்டுள்ளனர. குறிப்பாக 15 வயது முதல் 44 வயது வரை உள்ளவரகளுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடுமையான மனச்சோரவு பற்றிய ஆய்வு புருவத்தை உயரத்தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடுகள் அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுகளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில் எதிரபாரத்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.

அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பயங்கரவாதத் தாக்குதல் தொடரபான அச்சம் ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர. அமெரிக்க வேலையின்மை அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநரகள் சுட்டிக்காட்டுகிறாரகள். அதற்கு மாறாக பொருளாதார நெருக்கடியை எதிரகொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோரவு குறைவு என்பது அந்த வல்லுநரக ளின் கருத்தாகும்.

கடுமையான மனச்சோரவு இந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை துக்கம் தவறு செய்துவிட்டதாகக் கருதுதல் தாழ்வு மனப் பான்மை தூக்கமின்மை பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் அமெரிக்கா ஜெரமனி சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோரவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாரகள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

மனச்சோர்வு அல்லது உளச்சோரவு நோய்

மனக்கவலை அதிகாலை தூக்கமின்மை
மிகுந்த சோர்வு பசியின்மை
எடை குறைவு அடிக்கடி அழுதல்
தன்னம்பிக்கையின்மை
எதிலும் ஆரவமின்மை
அதிகமான குற்ற உணர்வு

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவலுக்கு நன்றிகள்...