வியாழன், 28 ஜூலை, 2011

மனச்சோர்வில் இந்தியர்களுக்குதான் முதலிடம்!!

உலக சுகாதாரக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வில், மனதளவில் பெரிய அளவில் சோர்வாக இருப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, சீனர்கள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் மனச்சோர்வு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மிகவும் கடுமையான மனச்சோர்வு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோர்வு உடையதாக இருக்கிறது.

பி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்
ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில், கொலம்பியா, இந்தியா, சீனா, லெபனான், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளர்ச்சி குறித்து உலக வங்கி நிர்ணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மனச்சோர்வு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் சுமார் 12 கோடிப்பேர் மனச்சோர்வால் பாதிக்கப்பட் டுள்ளனர். குறிப்பாக, 15 வயது முதல் 44 வயது வரைஉள்ளவர்களுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடு மையான மனச்சோர்வு பற் றிய ஆய்வு புருவத்தை உயர்த் தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடு கள், அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுக ளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில், எதிர்பார்த்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அச்சம், ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அமெரிக்க வேலையின்மை, அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 அதற்கு மாறாக, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோர்வு குறைவு என்பது அந்த வல்லுநர்க ளின் கருத்தாகும்.

பெண்களுக்கு கூடுதல் பாதிப்புஅனைத்து நாடுகளிலுமே கூடுதல் நெருக்கடியைச் சந்திப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைவிட இரண்டு மடங்கு மனச்சோர்வு பெண்கள் மத்தியில் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கணவரை இழப்பது, விவாகரத்து மற்றும் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்து வாழ்வது ஆகிய பிரச்சனைகள் பெண்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. சமூக அமைப்பில் பெண்களுக்கு தரப்படும் இடமே இத்தகைய பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கிட்டத்தட்டஅனைத்து நாடுகளிலுமே பெண்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதும்போக்கு உள்ளது.

கடுமையான மனச்சோர்வுஇந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை, துக்கம், தவறு செய்துவிட்டதாகக் கருதுதல், தாழ்வு மனப்
பான்மை, தூக்கமின்மை, பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

1 கருத்து:

Svstarvelan சொன்னது…


*ஆண்களைவிட இரண்டு மடங்கு மனச்சோர்வு பெண்கள் மத்தியில் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது*

பெண்கள் எப்போதும் வேதனைக்குறியவர்கள்தான் போலும்.. :-(..